Tuesday 15 May 2012

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியில் 'பள்ளி மேலாளர் வாரியம்' அமைந்தது




கடந்த மே 13-ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையன்று சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் பள்ளி மேலாளர் வாரியக்குழு வெற்றிகரமாக அமைக்கப்பட்டது. 180க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இப்பள்ளிக்கு இன்றுவரையில் சொந்த நிலமில்லாத நிலையில் பள்ளியின் வளர்ச்சி தடைபடுவதால், சுற்றுவட்டார பொதுமக்கள், பள்ளியின் முன்னால் மாணவர்கள், அரசு சார்பற்ற இயக்கத்தின் பிரதிநிதிகள், பெற்றோர்கள் ஆகியோர் இணைந்து பள்ளி மேலாளர் வாரியத்தினை அமைத்திருக்கின்றனர். பள்ளி மேலாளர் வாரியத்தின் தலைவராக திரு.எஸ்.சங்கர் குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.அவரோடு சேர்ந்து பணியாற்ற 10 வாரிய உறுப்பினர்களும் இணைந்துள்ளனர். பெற்றோர், ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு.எஸ்.மோகன் வாரியத்தின் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்சமயம் சுங்கை பக்காப் பட்டிணத்தில் 5 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்நிலத்தின் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாகவும் வாரியத்தின் துணைத்தலைவர் திரு.எஸ்.மோகன் குறிப்பிட்டார். தற்சமயம் சிறிய வகுப்பறைகளில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி பயின்றுவருவதாக பள்ளியின் தலைமையாசிரியை திருமதி சுமதி அவர்கள் வருத்தத்தோடு கூறினார். இப்பள்ளி மேலாளர் வாரியம் அமைவதன் வழி பள்ளிக்கும் மாணவர்களும் சிறந்த எதிர்காலம் அமையும் எனும் நம்பிக்கை வலுப்படுவதாக அவர் கூறினார்.

No comments:

Post a Comment